/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எலிபவுடர் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு
/
எலிபவுடர் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு
ADDED : ஆக 19, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காது வலியால் எலி பவுடர் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரைச் சேர்ந்தவர் பிரபு மனைவி சசிகலா, 30; இவருக்கு சில மாதங்களாக காது வலி இருந்துள்ளது. கடந்த 15ம் தேதி வலி தாங்க முடியாததால் சசிகலா வீட்டில் இருந்த எலி பவுடரை சாப்பிட்டுள்ளார்.
உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.