/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை தேவை
/
மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை தேவை
ADDED : மே 20, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் இருந்து நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பணியாளர்கள் என தினமும் 500க்கும் மேற்பட்டோர் ரோடுமாமாந்துார் வழியாக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு வாகனங்களில் செல்கின்றனர்.
இந்தசாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சாலை குறுகிய அளவிலேயே இருப்பதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்வதில் சிரமம் நீடிக்கின்றது. இந்தப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது.
பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலையில் மின்விளக்குகள் பொறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

