sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ்கள் இன்று முதல் இயக்கம்

/

அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ்கள் இன்று முதல் இயக்கம்

அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ்கள் இன்று முதல் இயக்கம்

அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ்கள் இன்று முதல் இயக்கம்


ADDED : மார் 03, 2025 07:28 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் மற்றும் சங்கராபுரத்தில் இருந்து ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, கூடுதல் அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

ரிஷிவந்தியம் அருகே பாவந்துாரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இதில், சங்கராபுரம் மற்றும் தியாகதுருகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லுாரிக்கு செல்ல, போதிய அரசு பஸ் வசதி இல்லை.

இதனால் மாணவர்கள் ஆட்டோ மற்றும் தனியார் பஸ்சில் கல்லுாரிக்கு சென்றனர். இது குறித்து கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் தியாகதுருகம் மற்றும் சங்கராபுரத்தில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதாவது, தியாகதுருகத்தில் இருந்து பாவந்துார் வரை காலையில் 9:00 மணிக்கும், அடுத்த 10 நிமிடங்கள் கழித்தும் அரசு பஸ்கள் இயக்கப்படும்.

தியாகதுருகத்தில் இருந்து பாவந்துார் வழியாக சங்கராபுரத்திற்கு காலை 9:30 மணி மற்றும் மதியம் 2:20 மணிக்கும், சங்கராபுரம் பஸ்நிலையத்தில் இருந்து தினமும் காலை 8:00 மணிக்கு பகண்டைகூட்ரோடு, மாடாம்பூண்டி மற்றும் பாவந்துார் வழியாக தியாகதுருகத்திற்கும், அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us