sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

/

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை


ADDED : ஜூன் 02, 2024 05:29 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார், சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்கள் பட்டியல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டண தொகை 50 ரூபாய் செலுத்த வேண்டும். வரும் 7ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையத்தில் வெளியிடப்படும்.

தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் சந்தேகம் ஏற்பட்டால் govtvpmdtad@gmail.com என்ற முன்னஞ்சல் முகவரியிலும், 04146-294989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us