/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 31, 2024 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரசு மருத்துவமனை சார்பில், கடைவீதி மும்முனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை முதன்மை மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
டாக்டர் அறிவழகன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
ஊர்வலத்தில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், தனியார் நர்சிங் கல்லுாரி மாணவிகள் மற்றும் ஆய்வக நுட்புனர்கள் முத்தாம்பாள், வான்மதி, நம்பிக்கை மைய ஆலோசகர் தேவி, முனிராஜ், சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.
டாக்டர் ராஜ்மோகன் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியேற்கப்பட்டது.