/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., பாலிடெக்னிக்கில் பயிற்சி பயிலரங்கம்
/
ஏ.கே.டி., பாலிடெக்னிக்கில் பயிற்சி பயிலரங்கம்
ADDED : ஆக 31, 2024 03:43 AM

கள்ளக்குறிச்சி: ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பயிலரங்கம் நடந்தது.
ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏர்கண்டிஷனிங் துறை சார்பில் நடந்த பயிற்சியை ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் கபிலர் வாழ்த்திப் பேசினார்.
யுனிக் நிறுவனம் சார்பில் பயிற்சியாளர்கள் தீபக், இம்ரான் ெஷரிப் ஆகியோர் டிசைன் அண்ட் டிராப்டிங் தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிலரங்கத்தில் திருவண்ணாமலை, கடலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் 568 பேர் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் செய்திருந்தார்.