/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா
/
திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா
ADDED : ஜூன் 25, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
அதனையொட்டி, காலை 8:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜை, மூலவருக்கு பக்தர்களால் அபிஷேகம், ஆரத்தி பூஜை நடந்தது.
தொடர்ந்து மகா தீபாராதனையும், மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 8:00 மணிக்கு ஆரத்தி பூஜை, 9:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகள் ஆலய நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.