/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 08, 2024 05:13 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2024 -2025ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள 27 பள்ளி மாணவர் விடுதிகள், ஒரு தொழிற்பயிற்சி மாணவர் விடுதி, 11 பள்ளி மாணவியர் விடுதிகள், ஒரு ஆதிதிராவிடர் நலக்கல்லுாரி மாணவியர் விடுதி என மொத்தம் 40 விடுதிகள் உள்ளன.
பள்ளி விடுதிகளில் தங்கி பயில விருப்பமுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் உணவும் உறைவிடமும் 4 இணை சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும்.
இவ்விடுதிகளில் சேர்வதற்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
மாணவர்களது இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கு 5 கி.மீ., துாரத்திற்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதியானது மாணவியர்களுக்கு பொருந்தாது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் விடுதியில் சேர்ந்து படித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.