ADDED : மே 15, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : தொங்கியாநத்தம் கிராமத்தில் இடம் குறித்த தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் மணி, 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் நடேசன் இருவருக்குமிடையே இடம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் நடேசன், தனது மகன் செல்வராசுடன் சேர்ந்து மணியை தாக்கினார்.
புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார், நடேசன், செல்வ ராசு ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, செல்வராசு, 40; என்பவரை கைது செய்தனர்.

