/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜே.எஸ்., பள்ளியில் பேரவை தேர்தல்
/
ஜே.எஸ்., பள்ளியில் பேரவை தேர்தல்
ADDED : ஆக 12, 2024 06:38 AM

கள்ளக்குறிச்சி: ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பேரவை தேர்தலில் வெற்றி மாணவர்களுக்கு பதவியேற்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், தேர்தல் விதிமுறைகள், ஓட்டுப்போடுவதன் அவசியத்தை மற்றும் தலைமை பண்பினை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதற்காக, 4 குழுக்கள் பிரிக்கப்பட்டு, மாணவ தலைவர், மாணவி தலைவி, கலாசார செயலாளர், விளையாட்டு தலைவர் என 13 பதவிகள் உருவாக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட 42 மாணவ, மாணவிகள் விருப்பம் தெரிவித்து, பள்ளியில் பிரசாரம் செய்தனர். தொடர்ந்து, கடந்த ஜூலை 18ம் தேதி தேர்தல் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பதவியேற்பு விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் செந்தில்குமார், தாளாளர் ஜனனி, முன்னிலையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி வாசித்து பதவியேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, துணை முதல்வர் பாபு உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்பங்கேற்றனர்.