/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு ஊழியர்களை தாக்கியவர் கைது
/
அரசு ஊழியர்களை தாக்கியவர் கைது
ADDED : மே 11, 2024 04:48 AM

உளுந்துார்பேட்டை: மணல் கடத்தலை தடுத்த வருவாய்த் துறையினரை தாக்கிய மாட்டு வண்டி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு திருநாவலுார் வருவாய் ஆய்வாளர் சிவச்சந்திரன் தலைமையில் 4 கிராம உதவியாளர்கள் அங்கு விரைந்தனர்.
அப்போது ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர். வருவாய்த் துறையினர் அங்கிருந்த 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து எடுத்து வந்தனர்.
இதனையறிந்த மாட்டு வண்டி உரிமையாளரான உளுந்துார்பேட்டை அடுத்த ஆரியநத்தத்தை சேர்ந்த குப்புசாமி, 44; மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி கிராம உதவியாளர்களை தாக்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து குப்புசாமியை கைது செய்தனர்.