நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் 'பைக்' திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் தினேஷ் 25; நகைக் கடை ஊழியர்.
இவர், நேற்று அவருடைய பைக்கை, வேலை பார்க்கும் நகைக்கடை முன் நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்து போது, பைக் காணவில்லை.
புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.