நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; நீலமங்கலத்தில் திருடுபோன பைக்கை போலீசார் தேடிவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்,49; இவர் கடந்த 2ம் தேதி இரவு 9.45 மணியளவில் தனது பைக்கை அதே பகுதியில் உள்ள தனது கிளினிக் முன் நிறுத்தியுள்ளார். சில மணி நேரங்களுக்கு பிறகு பார்த்த போது பைக்கை காணமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.