/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேன் மோதி சைக்கிளில் சென்றவர் பலி
/
வேன் மோதி சைக்கிளில் சென்றவர் பலி
ADDED : மே 21, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே வேன் மோதி சைக்கிளில் சென்றவர் இறந்தார்.
அரகண்டநல்லுார் அடுத்த கோட்டமருதுாரைச் சேர்ந்தவர் மணி, 55; கடந்த 18ம் தேதி இரவு 9:00 மணி அளவில் சைக்கிளில் மணம்பூண்டியில் இருந்து கோட்டமருதூருக்கு சைக்கிளில் சென்றார்.
ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிரில் வந்த வேன் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மணி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

