/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்
ADDED : மே 24, 2024 11:04 PM
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு அண்ணாதுரை மகன் சரவணன், 29; இவரது மனைவி புவனேஸ்வரி, 27; இருவரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சங்கராபுரத்திலிருந்து செம்பராம்பட்டு நோக்கிச் சென்றனர்.
பூட்டை சாலையில் 8:30 மணியளவில் வந்தபோது எதிரே சங்கராபுரம், இந்திரா நகரைச் சேர்ந்த மணி மகன் அருண்குமார், 30; ஓட்டி வந்த பைக் சரவணன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில், சரவணன், புவனேஸ்வரி, அருண்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன் மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருண்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

