sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி மூங்கில்துறைப்பட்டில் கடையடைப்பு

/

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி மூங்கில்துறைப்பட்டில் கடையடைப்பு

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி மூங்கில்துறைப்பட்டில் கடையடைப்பு

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி மூங்கில்துறைப்பட்டில் கடையடைப்பு


ADDED : ஆக 30, 2024 12:09 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலை பணிகளை விரைவாக முடிக்க கோரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில், மூங்கில்துறைப்பட்டில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு வணிகர் சங்கத் தலைவர் தர்பார் தலைமை தாங்கினார்.

மாநில இணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், தொகுதி செயலாளர் ஜெயபால், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வணிகர்கள் கடையை பூட்டி கருப்பு கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை நான்கு வழிச் சாலை பணி மந்தமாக நடப்பதால், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கடும் அவதியடைகின்றனர்.

பணியை விரைந்து முடிக்கக் கோரி, கோஷமிட்டபடி, மூங்கில்துறைப்பட்டு, வாழவச்சனுார் அனைத்து வணிகர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், கிராம மக்கள் ஊர்வலமாக அண்ணா நகரில் இருந்து நான்கு முனை சந்திப்பு வரை சென்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் நெடுஞ்சாலை துறை பொறியாளர் சிவசுப்ரமணியம், துணைப் பொறியாளர் சர்மா, டி.எஸ்.பி., குகன், இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், கிராம நிர்வாக அலுவலர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா ஆகியோர் போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறியதை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us