sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மலைப்பாதை அடைப்பு: பொதுமக்கள் போராட்டம்

/

மலைப்பாதை அடைப்பு: பொதுமக்கள் போராட்டம்

மலைப்பாதை அடைப்பு: பொதுமக்கள் போராட்டம்

மலைப்பாதை அடைப்பு: பொதுமக்கள் போராட்டம்


ADDED : ஆக 18, 2024 04:51 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : ங்கில்துறைப்பட்டு அருகே மலைப்பாதையை பாறாங்கல் போட்டு அடைத்த தனி நபரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெருவலுார் எல்லையில் மலைக்குன்று உள்ளது. மலைக்குன்றைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், அன்றாடம் விவசாயத்திற்கு செல்ல மலையடி பாதையின் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால், பாதையினை நேற்று தனி நபர் பெரிய பாறாங்கற்களை வைத்து அடைத்துள்ளனர்.

இதனால், அந்த வழியாக செல்ல முடியாததால் அப்பகுதி மக்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஜே.சி.பி., மூலம் பாறாங்கற்களை அகற்றினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us