ADDED : செப் 05, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார் மற்றும் மாணிக்கம் ஆகியோர் தனி, தனியாக நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டிற்கு பின்புறமாக மதுபாட்டில் விற்பனை செய்த, கூத்தக்குடியை சேர்ந்த பெரியசாமி மகன் மோகன்,45; என்பவரை போலீசார் கைது செய்து, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கனங்கூரை சேர்ந்த வேலவன் மகன் முருகன்,64; என்பவரை கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.