sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேர்தல் அழைப்பிதழ் கொடுத்து ஓட்டளிக்க கலெக்டர் அழைப்பு

/

தேர்தல் அழைப்பிதழ் கொடுத்து ஓட்டளிக்க கலெக்டர் அழைப்பு

தேர்தல் அழைப்பிதழ் கொடுத்து ஓட்டளிக்க கலெக்டர் அழைப்பு

தேர்தல் அழைப்பிதழ் கொடுத்து ஓட்டளிக்க கலெக்டர் அழைப்பு


ADDED : மார் 27, 2024 11:15 PM

Google News

ADDED : மார் 27, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி வாக்காளர்களிடம் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் கொடுத்து ஓட்டளிக்க கலெக்டர் அழைப்பு விடுத்தார்.

கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சின்னசேலம் விஜயபுரம் நகரில் ஓட்டளிப்பதை வலியுறுத்தும் வகையில் கலெக்டர் ஷ்ரவன்குமார், மூத்த வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி குடும்பத்துடன் வந்து ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பால் வாங்குவதற்கு வந்த பொதுமக்களிடம் தேர்தலில் ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து அழைப்பிதழை வழங்கினார்.

பின்னர் சின்னசேலம் பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறு அறிவுறுத்தினார்.

இதில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், தேர்தல் விழிப்புணர்வு மேற்பார்வையாளர் செல்வி, தாசில்தார் கமலக்கண்ணன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us