/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்து விதி மீறல் 35 பேர் மீது வழக்கு
/
போக்குவரத்து விதி மீறல் 35 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 19, 2024 03:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் விதி மீறிய 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ெஹல்மெட் இன்றி பைக் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, காாில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது என 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.