sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தாய், மகனை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

/

தாய், மகனை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய 9 பேர் மீது வழக்கு


ADDED : மே 22, 2024 12:10 AM

Google News

ADDED : மே 22, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அருகே வீட்டிற்குள் புகுந்து தாய், மகனைத் தாக்கிய 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த செம்படாக்குறிச்சியைச் சேர்ந்தவர் தனசேகரன் மகன் அலெக்சாண்டர், 38; இவர், கடந்த 18ம் தேதி மதியம் 1:00 மணிக்கு பைக்கில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த சங்கர் என்பவர் ஓரமாக நின்று பேசும்படி கூறினார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு சங்கர் தனது ஆதரவாளர்கள் ராகுல், விஷ்ணு, மகேந்திரன், அயோத்தி, வினோத், ரவி, சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அலெக்சாண்டர் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது தாய் ரேவதியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் சங்கர் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us