/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இடம் தொடர்பாக தகராறு 6 பேர் மீது வழக்குப் பதிவு
/
இடம் தொடர்பாக தகராறு 6 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஆக 21, 2024 07:19 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இடம் தொடர்பான தகராறில் 2 குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 72; அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜவேல், 59; இருவருக்கும் பூர்வீக இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 18ம் தேதி பிரச்னைக்குரிய ஓட்டு வீட்டின் ஓடுகளை ராஜவேல் பிரித்தபோது 2 குடும்பத்தினருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், ராஜவேல், இவரது மகன்கள் செந்துார் முருகன், மருதுமலை, நாராயணசாமி, இளங்கோவன், திலகவதி உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.