ADDED : ஜூலை 16, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டைச் சேர்ந்தவர் துரைசாமி மனைவி வள்ளியம்மாள், 59; இவர், நேற்று அதிகாலை 4:45 மணியளவில் கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் புதுஉச்சிமேடு தெற்கு காட்டுப்பாதை அருகே நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக ெஹல்மெட் அணிந்து பைக்கில் வந்த நபர், வள்ளியம்மாள் அணிந்திருந்த 3 சவரன் செயினை அறுத்துக்கொண்டு தப்பினார்.
புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.