/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
/
நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஆக 19, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 5 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை 20ம் தேதி பழையசிறுவங்கூர், பரிக்கல், சீதேவி, காடியார், பொய்க்குணம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.
முகாமில் 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மனுக்களை பெறுகின்றனர். சம்மந்தப்பட்ட கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.