/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 17, 2024 03:32 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.
கல்வராயன்மலையில் உள்ள ஆரம்பூண்டி, மேல்பாச்சேரி, தொரடிப்பட்டு, வெள்ளிமலை, கரியாலுார், குண்டியானத்தம், பொட்டியம் உள்ளிட்ட 7 ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நேற்று நடந்தது.
கரியாலுார் கோடைவிழா அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு பழங்குடியினர் நலத்துறை திட்ட இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய தலைவர் சந்திரன், துணை தலைவர் பாட்சாபீஜாஹீர் உசேன், பேரூராட்சி தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., ஐயப்பன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் கோவிந்தராஜ், பன்னீர்செல்வம், மின்துறை உதவி செயற்பொறியாளர் அருள் ஒன்றிய செயலாளர்கள் சின்னத்தம்பி, கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 7 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.