sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை லோன் மேளா துவக்கம் கலெக்டர் பிரசாந்த் தகவல்

/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை லோன் மேளா துவக்கம் கலெக்டர் பிரசாந்த் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை லோன் மேளா துவக்கம் கலெக்டர் பிரசாந்த் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை லோன் மேளா துவக்கம் கலெக்டர் பிரசாந்த் தகவல்


ADDED : ஜூலை 25, 2024 06:35 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினருக்கான லோன் மேளா நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்தவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் மற்றும் குழுக்கள் கடன் வழங்கப்படுகிறது.

இதற்கான லோன் மேளா கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வரும் 26 ம் தேதி காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கிறது. அதேபோல், உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வரும் ஆக.,2ம் தேதியும், திருக்கோவிலுார் தாலுகாவில் வரும் 9ம் தேதியும் நடக்கிறது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, உரிய வருமான சான்றுடன் உள்ளிட்டவையுடன் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்), கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள், கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி, கல்லுாரி மாற்று சான்றிதழ், உண்மை சான்று, கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது அல்லது சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

லோன் மேளா முகாமில் அனைத்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் உள்ளது.






      Dinamalar
      Follow us