/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை
/
கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை
ADDED : செப் 01, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கரடிசித்துார் கிராமத்தில் கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி மகள் ஹரினிதிவ்யா, 21; இவர், சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில்,கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.