/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
/
கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
ADDED : பிப் 27, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு, ; கல்லுாரி சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரது மனைவி சசிகலா, 37; கணவரை இழந்த இவர், தனது இருண்டு மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகள் சந்தியா,19; கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
சசிகலா கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து தேடிவருகின்றனர்.