sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுார் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்

/

திருக்கோவிலுார் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்

திருக்கோவிலுார் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்

திருக்கோவிலுார் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்


ADDED : ஜூன் 12, 2024 11:48 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது.

ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய கூட்டம், திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கீதா தலைமையில் நடந்தது.

தாசில்தார் மாரியாப்பிள்ளை முன்னிலை வகித்தார். முதல் நாளான நேற்று ஆவிகொளப்பாக்கம் குறுவட்ட கிராம கணக்குகளை ஜமாபந்தி அலுவலர் கீதா ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வருவாய் ஆய்வாளர்கள் மூர்த்தி, சதீஷ், ஆனந்தசுதன் அனைவரையும் வரவேற்றனர். தலைமை நில அளவையர் தேவகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தவமணி, மண்டல துணை வட்டாட்சியர் கங்கா லட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்


சங்கராபுரத்தில் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி துவங்கியது.

வருவாய் தீர்வாய அதிகாரி லுார்துசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சத்தியநாராயணன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலை வரவேற்றார்.

லுார்துசாமி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் பட்டா மாற்றம்,முதியோர் உதவித் தொகை,இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொது மக்களிடமிருந்து 75 மனுக்கள் பெறப்பட்டது.

முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தனவேல்,மண்டல துணை தாசில்தார் ராமசாமி,தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், தலைமை நில அளவர் பால் தினகரன்,வருவாய் ஆய்வாளர் கல்யாணி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us