/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவி, மகன் மாயம் கணவர் புகார்
/
மனைவி, மகன் மாயம் கணவர் புகார்
ADDED : ஜூன் 05, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் பூமாலை மனைவி சங்கீதா,24; பூமாலை பெங்களூரில் பணிபுரிவதால் சங்கீதா மற்றும் அவரது ஒன்றரை வயது மகன் சஞ்சய் ஆகியோர் வீட்டில் தனியாக வசித்தனர்.
கடந்த 4ம் தேதி காலை வெளியே சென்ற சங்கீதா, சஞ்சய் ஆகியோர் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.