ADDED : ஆக 02, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மத்திய அமைச்சரை கண்டித்து காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குறித்து அவதுாறாக பேசிய முன்னாள் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் நல்ல குழந்தைவேல், வட்டார தலைவர்கள் பெரியசாமி, பாலகிருஷ்ணன், சீனிவாசன், சேவாதளம் முருகன், மகளிர் அணி அமுதா, நிர்வாகிகள் விஜயகுமார், வீரமுத்து, ஆறுமுகம், ராமசாமி, ஆனந்த், ரவி, ராஜகோபால், கலியன், ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.