/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமானப்பணி விரைந்து முடிக்கப்படும்: கலெக்டர் தகவல்
/
புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமானப்பணி விரைந்து முடிக்கப்படும்: கலெக்டர் தகவல்
புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமானப்பணி விரைந்து முடிக்கப்படும்: கலெக்டர் தகவல்
புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமானப்பணி விரைந்து முடிக்கப்படும்: கலெக்டர் தகவல்
ADDED : மார் 04, 2025 09:02 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் 139.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களைக் கொண்டு 35.18 ஏக்கர் பரப்பில் கட்டப்படும் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமனப் பணி நடைபெற்று வருகிறது.
பணிகளை நேற்று நேரில் பார்வையிட்ட கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது:
தரைதளத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பத்திரிக்கையாளர் அறை, மாவட்ட கருவூலம் உள்ளிட்ட அலுவலக அறைகள், முதல் தளம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தேர்தல் அலுவலகம், திட்ட இயக்குனர் அலுவலகம், வருவாய் அலுவலகங்கள்.
இரண்டாம் தளத்தில் டி.ஆர்.ஓ., அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல வாரியம், மாவட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட அறைகள்.
மூன்றாம் தளத்தில் கலெக்டர் அறை, கூட்ட அரங்கம், காணொளிக் காட்சி அறை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கலந்தாய்வு அறை, எல்காட், என்.ஐ.சி., வருவாய்த் துறை அலுவலகம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.
இதேபோல் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆகிய தளங்களில் பாஸ்போர்ட் அலுவலகம், முன்னாள் ராணுவத்தினர் நல வாரியம், கைத்தறி அலுவலகம், தேர்தல் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்வளர்ச்சி அலுவலகம், தணிக்கை அலுவலகம், பஞ்சாயத்து, உள்ளுர் திட்டமிடல், நில அளவையர் அலுவலகம், சுகாதாரத்துறை, சி.இ.ஓ., அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலக அறைகளும் கட்டப்பட உள்ளது.
இந்த புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகள் தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு உரிய திட்ட விதிமுறைகளின்படி விரைந்து முடித்து, திட்டமிட்ட காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முன்னதாக கலெக்டர், வீரசோழபுரம் கிழக்கு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கான இடத்தினை பார்வையிட்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.