/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரியில் 10ம் தேதி கலந்தாய்வு
/
அரசு கல்லுாரியில் 10ம் தேதி கலந்தாய்வு
ADDED : ஜூலை 06, 2024 05:30 AM
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 10ம் தேதி நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் மணிகண்டன் (பொறுப்பு) செய்திக்குறிப்பு:
கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 10ம் தேதி பி.காம்., - பி.ஏ., தமிழ், பொருளாதாரம், பி.எஸ்சி., புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கல்லுாரியில் சேர விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.