ADDED : ஜூன் 11, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் துணிக்கடைக்கு வேலைக்கு சென்ற பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி தாலுகா, கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் ஜெய் மகள் கலையரசி,17; 9ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத கலையரசி, கடந்த ஒரு மாதமாக கள்ளக்குறிச்சியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 6ம் தேதி காலை வழக்கம்போல் கடைக்கு சென்ற கலையரசி, மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் கலையரசியை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தாய் அஞ்சலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.