ADDED : செப் 09, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகள் அபிராமி, 24; அதே பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை சின்னசேலத்தில் நடந்த இல்லம் தேடி கல்வி பயிற்சி வகுப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் மங்களவள்ளி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.