/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகளுடன் மகள் மாயம்; போலீசில் தாய் புகார்
/
குழந்தைகளுடன் மகள் மாயம்; போலீசில் தாய் புகார்
ADDED : டிச 07, 2024 06:47 AM
திருக்கோவிலுார் ; திருக்கோவிலுார் அருகே குழந்தைகளுடன் மகளைக் காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தமன் மனைவி அபிராமி, 25; திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. யாழினி, 3; கீர்த்தீகன், 1; என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் வடமருதுாரில் உள்ள தாய் கம்சலா, 50; வீட்டிற்கு வந்திருந்தார்.
கடந்த 3ம் தேதி குழந்தைகளுடன் திருக்கோவிலுார் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் வீட்டிற்கும் செல்லவில்லை.
இது குறித்து கம்சலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.