ADDED : ஆக 17, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் மகள் செல்வரோகினி,16; இவர் நத்தக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு செல்வரோகினி குடும்பத்தினருடன் சாப்பிட்டு உறங்கியுள்ளார்.
தொடர்ந்து, நள்ளிரவு 1.30 மணியளவில் சேகர் எழுந்து பார்த்தபோது மகள் செல்வரோகினி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் செல்வரோகினியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை சேகர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.