ADDED : ஏப் 30, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : நாககுப்பத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த நாககுப்பத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகள் தாரணி, 21; நர்சிங் பட்டதாரி. கடந்த 28ம் தேதி மாலை 6:00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் அலமேலு அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.