ADDED : மே 06, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த நாககுப்பத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகள் சிவதர்ஷினி, 17; பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
இவர், கடந்த 3ம் தேதி மாலை 6:00 மணியளவில் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் விஜயா அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.