ADDED : ஜூலை 14, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது 16 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.