sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏமப்பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ராஜூ மருத்துவமனை சார்பில் பட்டம் இதழ் வழங்கல்

/

ஏமப்பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ராஜூ மருத்துவமனை சார்பில் பட்டம் இதழ் வழங்கல்

ஏமப்பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ராஜூ மருத்துவமனை சார்பில் பட்டம் இதழ் வழங்கல்

ஏமப்பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ராஜூ மருத்துவமனை சார்பில் பட்டம் இதழ் வழங்கல்


ADDED : ஜூலை 11, 2024 04:35 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி ராஜூ இருதயம்-தோல் மருத்துவமனை சார்பில், 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி, சுந்தரவிநாயகர் கோவில் தெரு ராஜூ இருதயம்-தோல் மருத்துவமனை சார்பில், ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், ராஜூ மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபு சக்கரவர்த்தி, தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்துபாலா ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு பட்டம் மாணவர் பதிப்பினை வழங்கி பேசியதாவது;

பெண் பிள்ளைகள் தங்களின் தகுதிகளை வளர்த்துக்கொண்டு, தனது சொந்தக்காலில் நிற்க வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

மாணவர்கள் அனைவரும் மது மற்றும் போதை, பழக்கத்திற்கு ஆளாக மாட்டோம் என சத்தியம் ஏற்கவேண்டும். கல்வி அறிவுடன் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள 'பட்டம்' இதழினை தினமும் படிக்க வேண்டும் என டாக்டர் இந்துபாலா கூறினார். வாரம்தோறும் பள்ளியில் நடக்கும் பட்டம் தொடர்பான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என டாக்டர் பாபு சக்கரவர்த்தி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் விஷ்ணுமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர் பாலுசாமி, ஆசிரியர்கள் பொன்னுசாமி, வாசுகுமார், பாலமுருகன், கலையரசி, முக்கனி, கமலா, அமுதா, கவிதா, வசந்தராணி, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us