/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் மீது வேன் மோதல் டிரைவர் பலி
/
பஸ் மீது வேன் மோதல் டிரைவர் பலி
ADDED : பிப் 27, 2025 07:46 AM
சங்கராபுரம், ; சங்கராபுரத்தில், நின்ற பஸ் மீது வேன் மோதியதில் டிரைவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த ஏத்தாபூரை சேர்ந்தவர் மகேந்திரன்,38; இவர் நேற்று முன்தினம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டில் நடந்த உறவினர் கரும காரியத்திற்கு சென்றார். பின், மதியம் 3:00 மணிக்கு அங்கிருந்து ஆம்னி வேனில் ஊருக்கு புறப்பட்டார்.
முரார்பாளையம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன், அங்கு நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்னால் மோதியது. இதில் வேனை ஓட்டி வந்த மகேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்தார்.
சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.