நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் துரைசாமி,67; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். கடந்த 10ம் தேதி ஏற்பட்ட வயிற்று வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தினை துரைசாமி குடித்துள்ளார்.
உடன் அவரது குடும்பத்தினர் துரைசாமியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.