sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

/

தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 05, 2024 06:53 AM

Google News

ADDED : செப் 05, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தை தினத்தன்று விருது பெற தகுதியானர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக் குறிப்பு:

தமிழக அரசு சார்பில் தேசிய பெண் குழந்தை தினமாக ஜனவரி 24ல் மாநில அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேர்வுபெறும் பெண் ஒருவருக்கு பாராட்டு பத்திரமும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும்.

பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீர்வு ஏற்படுத்தியிருத்தல். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு விருது வழங்கப்படுகிறது.

அதற்கு 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து https://Awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இணையவழி விண்ணப்பங்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாகவும், இணையதளத்திலும் மற்றும் நேரடியாகவும் உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலத்தில் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us