sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை தேவை

/

ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை தேவை

ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை தேவை

ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை தேவை


ADDED : ஜூலை 22, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : பாதுாரில் ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுார் பகுதியைச் சுற்றி 3 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு பாசனம் செய்து வருகின்றனர். ஆனால், ஏரிகளின் பல பகுதிகளை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

ஏரிகளில் நீர் நிரம்பினால் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதற்காக மந்தைவெளி புறம்போக்கு இடத்தல் தனியாக ஒரு ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பல தலைமுறைகளாக இருந்து வந்த இந்த இடங்களை தற்போது அக்கிரமிப்பாளர்கள் வண்டல் மண் கொட்டி ஆக்கிரமித்து பிளாட்டுக்களாக மாற்றி வருகின்றனர். ஏரி, குளங்களை ஆக்கிரமித்ததோடு கால்நடைகளின் மேச்சலுக்காக இருந்த இடங்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வருவதால் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையினரும் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து நீர்நிலைகளையும், மந்தவெளி புறம்போக்கு இடங்களையும் மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us