நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் இருந்த 3,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தொரங்கூர் தெற்கு ஓடை அருகே பிளாஸ்டிக் பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உடன், அங்கிருந்த 3,000 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
மேலும், இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

