/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம்
/
முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஆக 18, 2024 04:44 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் முன்னாள் படைவீரர்கள் குறை கேட்பு கூட்டம் வரும் 23ம் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் வரும் 23ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்த நபர்கள், தற்போது பணியில் உள்ளவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக தெளிவாக எழுதி இரட்டை பிரதிகளில் அடையாள அட்டையுடன் நேரில் சமர்ப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்கள் அசல் படைப்பணிச் சான்றுடன் வர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.