sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்விக் கட்டண சலுகைக்கான தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் இன்று நடக்கிறது

/

கல்விக் கட்டண சலுகைக்கான தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் இன்று நடக்கிறது

கல்விக் கட்டண சலுகைக்கான தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் இன்று நடக்கிறது

கல்விக் கட்டண சலுகைக்கான தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் இன்று நடக்கிறது


ADDED : ஏப் 09, 2024 04:45 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில், அனைத்து பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்விக் கட்டண சலுகை தேர்வு இன்று 9ம் தேதி நடக்கிறது.

இது குறித்து பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் பெற்றோர்களின் பொருளாதார சுமை, மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கல்விக் கட்டண சலுகை அளிப்பதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கட்டண சலுகைத் தேர்வு, இன்று 9ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

அனைத்து பள்ளி 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு பாடங்களின் அடிப்படையில் வினாக்கள் இடம் பெறும். ஒரு மதிப்பெண் வினா அடிப்படையில் 100 மதிப்பெண்ணுக்கு கேட்கப்படும். மதிப்பெண் அடிப்படையில் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கான கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள வசதியாக பள்ளி நிர்வாகம் சார்பில் இலவச பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலுார், திண்டிவனம், குறிஞ்சிபாடி, நெய்வேலி, சிதம்பரம், பெண்ணாடம், விழுப்புரம், வானுார், செஞ்சி, மேல்மலையனுார், திருக்கோவிலுார், திருவண்ணாமலை, திருவெண்ணெய்நல்லுார், விருத்தாசலம், ஆத்துார் ஆகிய ஊர்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.






      Dinamalar
      Follow us