ADDED : ஆக 15, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில், தாமோதரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, அரிமுத்து, தெய்வீகன், வேலு ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது. அதனையொட்டி, கடலுார் மத்திய சிறையில் உள்ள 7 பேரையும் காணொலி வாயிலாக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
ஏழு பேரின் நீதிமன்ற காவலை வரும் 27ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.