/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
/
கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
ADDED : மே 27, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேல்வெள்ளிமலை பகுதியில் வெவ்வேறு இடங்களில் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், பேரல்களில் இருந்த 3,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார், கொட்டி அழித்து, 350 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, குறும்பலுார் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மற்றும் முருகன் ஆகிய இருவர் மீது கரியலுாார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

